News November 7, 2025
சைபர் மோசடி கும்பலிடம் சிக்கிய இந்தியர்கள் மீட்பு

மியான்மரில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கிய 26 பெண்கள் உள்பட 270 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். மொத்தம் 465 இந்தியர்கள் அங்கு சிக்கியுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை மீட்க நாளை விமானப்படை விமானங்கள் அனுப்பப்பட உள்ளன. வேலைவாய்ப்பு என அழைத்து செல்லப்பட்டு, சைபர் மோசடிகளை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். சமீபத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,500 பேர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 7, 2025
பாஜக மீது சாஃப்ட் கார்னர் காட்டும் விஜய்?

கரூர் துயருக்கு பிறகு BJP மீது விஜய் சாஃப்ட் கார்னர் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பரப்புரைகளில் பாசிசம் என BJP-ஐ விமர்சித்து வந்த விஜய், தற்போது பொதுக்குழுவில் அதே மாதிரி ஒரு வார்த்தையை கூட பயன்படுத்தவில்லை என்கின்றனர். SIR-க்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்தில் கூட EC-ஐ மட்டுமே சாடியுள்ளதால் ADMK-BJP கூட்டணிக்கு விஜய் அச்சாரம் போடுகிறாரோ என்ற சந்தேகம் எழுவதாக தெரிவிக்கின்றனர்.
News November 7, 2025
சென்னையில் அதிகரிக்கும் வீடுகள் விலை!

இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை உயர்ந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு சதுர அடி அளவு ஒப்பீட்டில், 2024-ம் ஆண்டுக்கான ஜூலை-செப்டம்படர் (Q3) சராசரி விலையை விட, நடப்பாண்டு ஜூலை-செப்டம்பர் (Q3) விலை குறைந்தபட்சம் 7% அதிகரித்துள்ளது. முழு விவரத்தை SWIPE செய்து பார்க்கவும்.
News November 7, 2025
அரசியல் நிகழ்வுகளுக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி

<<18215650>>அரசியல் பொதுக்கூட்டங்களுக்கான<<>> வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி, பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே பொதுமக்கள் காத்திருக்க அனுமதி. அதேபோல், அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள், இது தொடர்பாக நடந்து வரும் வழக்கு விசாரணையின் போது சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளன.


