News March 7, 2026
சைபர் மோசடியில் பணத்தை இழந்தால் இழப்பீடு

சைபர் மோசடியில் ₹50,000-க்கும் குறைவான தொகையை இழந்திருந்தால், ₹25000 வரை இழப்பீடு வழங்க RBI ஆலோசித்து வருகிறது. பணத்தை இழந்த 5 நாள்களுக்குள் புகார் அளிக்கப்பட்டால், எந்த கேள்வியும் கேட்காமல் இந்த தொகை வழங்கப்படும். இந்த திட்டம் குறித்து ஏப்ரல் 6 வரை வங்கிகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். இது நடைமுறைக்கு சாத்தியமாக இருந்தால், ஜூலை 1 முதல் இத்திட்டம் அமலுக்கு வரும்.
Similar News
News April 3, 2026
அப்துல் கலாம் பொன்மொழிகள்

*கடமைகளை வெற்றி, தோல்வி பாராமல் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தாலே புதிய பாதை நமக்காகத் திறந்தே இருக்கும் *வெற்றி என்பது நம் நிழல் போல. வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது அது நம் பின்னால் வரும் *திடமான மனதுடன் வாழ்ந்தால் என்றென்றும் வளர்ச்சியடையலாம் *முடியும் வரை முயற்சி செய், உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்த செயல் முடியும் வரை *சாவி இல்லாத பூட்டு இருக்காது, தீர்வு இல்லாத பிரச்னையும் இருக்காது
News April 3, 2026
வளைகுடா நாடுகளில் தினமும் 20 இந்தியர்கள் உயிரிழப்பு

2021-25 காலக்கட்டத்தில் வெளிநாடுகளில் 37,740 இந்திய ஊழியர்கள் இறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், 85%-க்கும் அதிகமானோர் வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களாக பணிபுரிந்தவர்கள் என்றும், சராசரியாக தினமும் 20 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து தூதரக & சட்ட உதவிகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 3, 2026
என்னை கத்தி கத்தி சாக விடாதீர்கள்: சீமான்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் உருப்படியான ஒரு முடிவை மக்கள் எடுக்க வேண்டும் என சீமான் கேட்டுக் கொண்டுள்ளார். தனக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்று நிம்மதியாக சாகவிடுங்கள் அல்லது தன்னிடம் தமிழகத்தை கொடுத்து வாய்ப்பளியுங்கள் என சீமான் கூறினார். மேலும் 15 ஆண்டுகளாக மக்களுக்காக கத்திவிட்டேன்; என் பாவமே உங்களை சும்மா விடாது என்றும் அவர் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>


