News August 7, 2025
சைபர் கிரைம் மோசடி பணம் மீட்பு

ஆவடி காவல் ஆணையரக இணையவழி குற்றப்பிரிவு போலீசாரால் 40 வழக்குகளில் மீட்கப்பட்ட 70 லட்சம் ரூபாய் பணத்தை ஆவடியில் உள்ள ஆவடி காவல் ஆணையராகத்தில் காவல் ஆணையாளர் கி.சங்கர் நேரில் உரியவர்களிடம் வழங்கினார். இணைய வழி பணப்பரிவர்தனைகளில் எப்போதும் விழிப்போடு இருங்கள். புகார்களுக்கு 1930 ஐ தொடர்பு கொள்ளவும்.
Similar News
News August 7, 2025
திருவள்ளூர்: தமிழ்நாட்டின் கலாச்சார நுழைவு வாயில்

தமிழ்நாட்டின் வடக்கு பகுதியில் ஆந்திர, கர்நாடக எல்லையில் அமைத்துள்ள திருவள்ளூர் பல மொழிகள், மதம், பண்பாடு என பன்முக தன்மையோடு விளங்குகிறது. புலிகாட் ஏரி, டச்சு கல்லறை, குடியம் குகைகள் என தனக்கென சிறப்பான இடங்களை கொண்ட திருவள்ளூர் தமிழகத்தின் கலாச்சார நுழைவு வாயிலாகவும் உள்ளது. இங்குள்ள பூண்டி நீர்த்தேக்கம் தான் சென்னையின் நீர் தேவையில் பெரும் பங்கு வகிக்கிறது. நம்ம மாவட்ட பெருமைகளை ஷேர் பண்ணுங்க.
News August 7, 2025
திருவள்ளூர் மக்களே சான்றிதழ் தொலைந்துவிட்டதா?

திருவள்ளூர் மக்களே, வருவாய்துறையின் கீழ் பெறப்படும் சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்துவிட்டால் தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டாம். நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் செல்போனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த <
News August 7, 2025
என்னென்ன சான்றிதல்களைப் பெறலாம்?

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.