News December 11, 2025
சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு

இரணியல் அருகே ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி புஷ்பம் (61). இவர் டிச.3 அன்று கார்த்திகை விளக்கேற்றும் போது சேலையில் தீ பிடித்தது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 6, 2026
குமரியில் நான்கு வட்டாட்சியர்கள் இடமாற்றம்

குமரியில் 4 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலக நேர்முக உதவியாளர் அஜிதா கிள்ளியூர் வட்டாட்சியராகவும், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் தோவாளை வட்டாட்சியராகவும், நிலமெடுப்பு தனி வட்டாட்சியர் வினை தீர்த்தான் பத்மநாபபுரம் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், தோவாளை வட்டாட்சியர் கோலப்பன் ரயில்வே நிலமெடுப்பு தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
News March 6, 2026
கன்னியாகுமரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

நாகர்கோவில் மாநகர திமுக மகளிர் அணி அமைப்பாளர் அம்மு, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் இன்று முறைப்படி விருப்ப மனுவை வழங்கினார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுகவின் முக்கிய நிர்வாகியான இவரது இந்த நடவடிக்கை, தொகுதி உடன்பாடு மற்றும் வேட்பாளர் தேர்வுக் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 6, 2026
குமரி: கீழே விழுந்து தொழிலாளி பரிதாப பலி.!

புதுக்கடை அருகே தவிட்ட விளையை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 65). இவர் தனது மகள் சுஜாவின் வீட்டில் நின்ற புளிய மரத்தில் புளிப்பறிப்பதற்காக ஏறினார். அப்போது மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


