News October 22, 2025
சேலம்: 4 மண்டலங்களில் கட்டுப்பாட்டு அறைகள்

சேலம் மாநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட அகரமகால் ஓடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். 4 மண்டலங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தங்க வைக்க போதுமான முகாம்கள் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
Similar News
News January 22, 2026
சேலத்தில் அதிரடி தீர்ப்பு!

சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த அர்ஷத் அலி(40), தனது மனைவி பல்கிஷை(28) வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதால், திருமணமான ஏழே மாதங்களில் பல்கிஷ் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அம்மாபேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, அர்ஷத் அலியை கைது செய்தனர். மேலும் சேலம் மகளிர் நீதிமன்றம், குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து அர்ஷத் அலிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
News January 22, 2026
சேலம்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News January 22, 2026
சேலம்: 8th போதும் அரசு டிரைவர் வேலை! APPLY NOW

சேலம் மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <


