News October 22, 2025

சேலம்: 4 மண்டலங்களில் கட்டுப்பாட்டு அறைகள்

image

சேலம் மாநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட அகரமகால் ஓடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். 4 மண்டலங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தங்க வைக்க போதுமான முகாம்கள் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

Similar News

News October 22, 2025

சேலத்தில் நாளைய மின்ரத்து பகுதிகள்

image

சேலம்: ஓமலூர் கோட்டம், கே. ஆர். தோப்பூர் துணை மின்நிலையத்தில் நாளை(அக்.23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மலையனூர், கலர்ப்பட்டி, கே. ஆர். தோப்பூர் சுற்றியுள்ள பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 22, 2025

சேலம்: பால் பண்ணை தொடங்க மானியம் பெறுவது எப்படி?

image

1)சேலம் மக்களே.., மத்திய அரசின் DEDS திட்டத்தின் மூலம் பால் பண்ணை தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
2)பால் பண்ணை, பால் கடை, பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு, கால்நடைகள் உள்ளிட்டவைக்கு மானியம் வழங்கப்படும்.
3)கடனை திரும்பச் செலுத்த 6 மாதம் – 3 ஆண்டுகள் வரை சலுகை காலம் சில இடங்களில் உண்டு.
4) இதற்கு விண்ணப்பிக்க நபார்டு வங்கி, கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகளை அணுகவும். (SHARE)

News October 22, 2025

சேலம்: அரசு வங்கியில் சூப்பர் வேலை! APPLY NOW

image

சேலம் பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா…? உங்கள் வங்கிப் பணிக் கனவைத் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. அரசு வங்கியின் UCO வங்கியில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க அக்.30ஆம் தேதியே கடைசி நாள். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க! இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!