News September 12, 2024
சேலம்: 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

இடையப்பட்டி ஊராட்சி நெய்யமலை கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சின்னதுரை (9). பூபதி மகன் கமலேஸ்வரன் (9). இரு சிறுவர்களும் நேற்று மாலை பள்ளி முடிந்ததும், விவசாயி பழனிசாமி என்பவரது கிணற்றில் குளிக்க இறங்கி நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் சிறுவர்கள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News August 24, 2025
சேலம்: சிலிண்டர் டெலிவரிக்கு அதிக பணம் கொடுக்கணுமா?

சேலம் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News August 24, 2025
2 மாதங்களுக்கு ஒருமுறை விதை பரிசோதனை அவசியம்!

சேலம் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; விவசாயிகள் விதையின் முளைப்புத்திறன், ஈரப்பதம் அறிந்து கொள்ள 2 மாதங்களுக்கு ஒருமுறை விதை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதன் முடிவுகளின் படி, சில பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ளலாம். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் விதைப் பரிசோதனை நிலையத்தில் ரூ.80 கட்டணத்துடன் விதை பரிசோதனை செய்யலாம்.
News August 24, 2025
சேலத்தில் பச்சிளம் பெண் குழந்தை விற்பனை!

சேலம் வீரபாண்டி, ரெட்டிப்பட்டியை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்-சிவகாமி தம்பதியினருக்கு கடந்த 9 நாள்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை தேவராஜ் என்ற புரோக்கர் மூலமாக, ரஞ்சித் என்பவருக்கு ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.