News September 1, 2025
சேலம் வழியாக மதுரை-ப்ரௌனி இடையே சிறப்பு ரயில்கள்

நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செப்.10 முதல் நவ.29 வரை சேலம் வழியாக மதுரை- ப்ரௌனி இடையே சிறப்பு ரயில்கள் (06059/06060) அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் புதன்கிழமைதோறும் மதுரையில் இருந்து ப்ரௌனிக்கும், சனிக்கிழமைதோறும் ப்ரௌனியில் இருந்து மதுரைக்கும் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
Similar News
News September 3, 2025
சேலம்: பொதுமக்கள் மனுக்கள் மீது விரைவு விசாரணை!

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தமிழக காவல்துறை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் கலந்து கொண்டு, பொதுமக்கள் அளித்த மனு மீதான விசாரணை நடத்தினார். இந்த முகாமில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News September 3, 2025
கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன் வழங்க ஏற்பாடு

நாளை சுப முகூர்த்த தினம் என்பதால் பத்திரபதிவு அதிகளவில் தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நாளை கூடுதலாக டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 150 டோக்கன் வழங்கப்பட்ட வந்து நிலையில், 200 ஆக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு டோக்கன் வழங்கப்படுகிறது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவிப்பு.
News September 3, 2025
சேல: 15 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது!

சேலம் மாவட்டத்தில் கொண்டையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மதிவாணன், இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கமலக்கண்ணன், மல்லியக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாபு, காமராஜர் நகர் காலனி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஷீலாதேவி உள்பட 15 ஆசிரியர்களுக்கு அரசின் டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.செப்.05- ல் சென்னையில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.