News February 25, 2025
சேலம் வருகை தந்த முதல்வருக்கு அமைச்சர் வரவேற்பு

சேலம் மாவட்டத்திற்கு இன்று (பிப்.25) வருகை புரிந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஆகியோர் புத்தகங்களை வழங்கி வரவேற்றனர். அதைத் தொடர்ந்து தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் வரவேற்றனர்.
Similar News
News February 25, 2025
எம்எல்ஏ வீட்டில் ரெய்டு- இபிஎஸ் கண்டனம்

கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ஜூனன் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்தை இதை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
News February 25, 2025
கணவன் வெட்டியதில் சிகிச்சை பெற்று வந்த மனைவி பலி

கெங்கவல்லி அருகே கிருஷ்ணாபுரம் காந்திநகரை சேர்ந்தவர் அசோக்குமார்(45). இவர் அவரது மனைவி தவமணி(38) மற்றும் மூன்று குழந்தைகளை கடந்த 19-ல் அரிவாளால் வெட்டினார். இதில் இரு குழந்தைகள் உயிர் இழந்தனர். மனைவி தவமணி மற்றும் மற்றொரு குழந்தை ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி தவமணி உயிரிழந்தார். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
News February 25, 2025
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணி நேர்காணல் ஒத்திவைப்பு

மார்ச் 1ஆம் தேதி நடைபெறவிருந்த சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது. அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கடும் எதிர்ப்பை அடுத்து நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது. தனக்கு ஆதரவான குறிப்பிட்ட நபரை பதிவாளராக கொண்டு வர துணைவேந்தர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அடுத்து பதிவாளர் பதவிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது.