News August 31, 2025
சேலம் ரயில் பயணிகள் கவனத்திற்கு

சேலம், ஜோலார்பேட்டை வழித்தடத்தில் தாசம்பட்டி சாம்பல் பட்டி இடையில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.அதன்படிஈரோட்டில் புறப்படும் ஈரோடு ஜோலார்பேட்டை பயணிகள் ரயிலானது 1ம் தேதி 2ம் தேதி வரை மொரப்பூர் வரை மட்டுமே இயங்கும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் ஜோலார்பேட்டையில் இருந்து புறப்படும் ரயில் மொரப்பூரிலிருந்து 3.47க்கு புறப்படும் என தகவல்
Similar News
News September 1, 2025
சேலம்; இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

சேலம் செப்டம்பர்-1 இன்றைய முக்கிய நிகழ்வுகள்;
▶️காலை 9:30 மணி இந்திய மருத்துவ சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் சங்க கட்டிட வளாகம்.
▶️காலை 10 மணி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்.
▶️ மாலை 4 மணி பாரதிய ஜனதா கட்சியினர் காங்கிரஸ் கட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்.
▶️மாலை 6 மணி சின்ன கடைவீதி ராஜகணபதி கோயிலில் சிறப்பு பூஜை சாமி ஊர்வலம்.
News September 1, 2025
சேலம் மாவட்டத்தில் 17 இடங்களில் உழவர் நல சேவை மையம்!

சேலம் மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகளை தொழில்முனைவோராக மாற்றும் வகையில் 17 இடங்களில் உழவர் நல சேவை மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 20 முதல் 45 வயதுக்குட்பட்ட வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்தவர்கள் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம். https://www.tnagrisnet.tn.gov.in/ மானிய உதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
News September 1, 2025
தொகுப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் பணியிடம்-விண்ணப்பிக்க அழைப்பு!

சேலம் மாவட்ட அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியான வெளிமுகமை நிறுவனங்கள் உரிய சான்றுகளுடன் தங்களது விண்ணப்பங்களை செப்.10 மாலை 05.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண் 415, 4-வது தளம், ஆட்சியர் அலுவலகம், சேலம்-636001 முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.