News December 19, 2025
சேலம் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

இந்திய ரயில்வே ஜெர்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் எல்எச்பி பெட்டிகளை படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. அதன்படி, சேலம் கோட்டத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மங்களூர் செல்லும் சென்னை–மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் எல்எச்பி பெட்டியாக மாற்றப்பட்டது. பிப்ரவரி 2 முதல் இது முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என சேலம் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 19, 2025
BIG BREAKING: சேலத்தில் 3,62,439 வாக்காளர்கள் நீக்கம்!

SIR பணிகளைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 3,62,439 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் -1,00,974, குடியிருப்பில் இல்லாதவர்கள் , முகவரி மாற்றம் உள்ளிட்ட இதரர் – 2,41,284 , இரட்டை பதிவு – 20,171 என மொத்தம் 3,62,439 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
News December 19, 2025
சேலம்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!
News December 19, 2025
ஆத்தூரில் இரும்பு ராடு திருடிய இரண்டு பேர் கைது!

ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை (70). இவர் கட்டிடம் கட்ட இரும்பு ராடு, ஜன்னல் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வைத்திருந்தார். அதில் 5 ராடுகள் திருட்டு போனது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இருவர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் ஆத்தூர் ஊரக போலீசார் விசாரித்து, பிரபாகரன் (36). ராஜக்கலை (41). உள்ளிட்ட இருவரை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.


