News March 31, 2024
சேலம்: ரயில் ஏப்ரல் 1 முதல் 5 நாட்களுக்கு ரத்து!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மற்றும் ரயில்வே பாதை பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதன் காரணமாக சேலம் ஜங்ஷனிலிருந்து அதிகாலை 5.20 மணிக்கு புறப்படும் சேலம் எஸ்வந்த்பூர் வண்டி எண். 16212 பயணிகள் ரயிலானது வரும் 1ம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
Similar News
News August 15, 2025
சுதந்திர தின விழா- ஜொலிக்கும் சேலம் ரயில் நிலையம்!

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (ஆக.14) சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மூவர்ண மின்விளக்குகளில் ஜொலித்த ரயில் நிலையத்தை ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். அத்துடன் செல்ஃபி புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தனர். இது தொடர்பான படத்தை சேலம் கோட்டம் சமூவலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.
News August 15, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.
News August 15, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.14) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.