News April 6, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய அறிவிப்பு

“பசூர்- ஊஞ்சலூர் ரயில்வே நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, வரும் ஏப்ரல் 08, 11 தேதிகளில் ஈரோடு- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (16845) கரூரில் இருந்து புறப்படும்; மறுமார்க்கத்தில், செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (16846) கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்; மேற்கண்ட ரயில் கரூர்- ஈரோடு இடையே இயக்கப்பட மாட்டாது” என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Similar News
News August 14, 2025
சேலம்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் என்ன செய்வது?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.(ஷேர் பண்ணுங்க)
News August 14, 2025
சேலம் GH-2ல் போதையால் பாதித்தோருக்கு சிறப்பு சிகிச்சை

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநலத்துறை சார்பில் போதை பழக்கத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாதந்தோறும் புறநோயாளிகள் பிரிவில் சுமார் 760 பேர் பயன்பெற்று வருகின்றனர். உள்நோயாளிகள் பிரிவில் 50 முதல் 60 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
News August 14, 2025
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

மூன்று நாட்கள் தொடர் விடுமுறையைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் எச்சரித்துள்ளனர். ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் தொப்பூர், பெரியார் பல்கலை., நத்தக்கரை, மேட்டுப்பட்டி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் ஆம்னி பஸ்களை ஆய்வு செய்வார்கள்.