News April 1, 2025
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு புதிய கோட்ட மேலாளர் நியமனம்!

சேலம் ரயில்வே கோட்டத்தின் புதிய கோட்ட மேலாளராக, வடகிழக்கு ரயில்வே மண்டல அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றி வரும் அதிகாரி பன்னாலால் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை சேலம் கோட்ட மேலாளராக நியமித்து ரயில்வே வாரியத்தின் இயக்குநர் ரவீந்தர்பாண்டே உத்தரவிட்டுள்ளார். தற்போது சேலம் கோட்ட மேலாளராக பணியாற்றி வரும் பங்கஜ் குமார் சின்ஹாவிற்கு புதிய பணியிடம் இன்னும் ஒதுக்கப்படவில்லை.
Similar News
News September 14, 2025
சேலம்: கருவில் பாலினம் கண்டறிந்து தெரிவிக்க வசூல்!

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்துத் தெரிவித்ததாக அரசு மருத்துவமனை டாக்டர்.தியாகராஜன் மற்றும் புரோக்கர் ஸ்ரீராம் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த போலீசார் பாலினம் கண்டறிந்து தெரிவிக்க ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை வசூல் செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
News September 14, 2025
சேலத்தில் பட்டாசு கடை வைக்க விண்ணப்பிப்பது எப்படி?

சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசுக் கடைகளை அமைக்க விரும்பும் வியாபாரிகள், வருகிற அக்டோபர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படம்,அடையாள அட்டை,வருமான வரி, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளம் அல்லது அனைத்து பொது இ-சேவை மையங்களிலும் விண்ணப்பம் செய்யலாம்.
News September 14, 2025
சேலம் வழியாக காரைக்குடிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக மைசூரு-காரைக்குடி-மைசூரு இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் (06243/06244) அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்.19-ஆம் தேதி முதல் நவ.30- ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சேலம், நாமக்கல், கரூர் வழியாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.