News September 23, 2025
சேலம்: ரபி பருவ சாகுபடி பயிர்களுக்கு காப்பீடு!

சேலம் மாவட்டத்தில் ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கும் பிரதம மந்திரி பயிர் காப்பீடடுத் திட்டத்தில், காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என சேலம் ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமியத்தொகையினை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 23, 2025
அங்கீகரிக்கப்படாத கட்சிகள் நேரில் ஆஜராக உத்தரவு!

சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்படாத தேசிய மக்கள் கழகம் உள்பட 2 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும் அறிவிப்பில் குறிப்பிட்ட தேதியில் தலைமைத் தேர்தல் அலுவலர், தலைமைச் செயலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி உரிய ஆவணங்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
News September 23, 2025
சேலம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

நவராத்திரி விழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக கோவை-சென்னை சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது சேலம் ரயில்வே கோட்டம். அதன்படி, வரும் செப்.28 முதல் அக்.12 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும். முன்பதிவு நாளை (செப்.24) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
News September 23, 2025
சேலம்: திருக்குறள் திருப்பணி பயிலரங்கம்

சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், திருக்குறள் திட்டத்தின் கீழ் திருக்குறள் பயிற்சி மற்றும் பயிலரங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று துவங்கியது. இந்த பயிலரங்கத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி துவக்கி வைத்தார். அக்டோபர்-6ம் தேதி முதல் வாரம்தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெறும், இந்த பயிலரங்கத்தில் அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு பயனடையலாம் என்றார்.