News September 3, 2025
சேலம்: முன் அனுமதி பெற வேண்டும் காவல் ஆணையாளர்!

சேலம் மாநகர எல்லைக்குள் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தவோ, பேரணி மேற்கொள்ளவோ, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ, குறிப்பிட்ட நாட்களுக்கு ஐந்து தினங்களுக்கு முன்னதாகவே சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார். மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
Similar News
News September 5, 2025
சேலம் செப்.6 உங்களுடன் ஸ்டாலின் நடைபெறும் இடங்கள்

சேலம் செப் 6 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் ▶️அஸ்தம்பட்டி தொங்கும் பூங்கா திருமண மண்டபம்▶️ சன்னியாசி குண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ▶️தாரமங்கலம் பொன்னுசாமி திருமண மண்டபம் தாரமங்கலம்
▶️ வனவாசி முருகேசன் முதலியார் திருமண மண்டபம் சந்தைப்பேட்டை ▶️கொங்கணாபுரம் திருக்குறள் திருமண மண்டபம் புதுப்பாளையம் ▶️பனமரத்துப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் ▶️சங்ககிரி பார்வதி பாய் திருமண மண்டபம்
News September 5, 2025
சேலம்: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

சேலம் மக்களே, சொந்த வீடு என்பது உங்கள் கனவா? அந்தக் கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது; தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஈரோட்டில் 250 மேற்பட்ட வீடுகளைக் கட்டியுள்ளது. இந்த வீடுகளைப் பெற, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.சொந்தமாக வேறு எந்தச் சொத்தும் இருக்கக்கூடாது. <
News September 5, 2025
தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க விருதுகள்!

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர்கள் விருதுக்கான விண்ணப்பங்களை https://www.tntourismawards.com/ என்ற இணையதளத்தின் வாயிலாக செப்.15- க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலரை 89398-96397, 0427-2416449 ஆகிய தொலைபேசி எண்களை அழைக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.