News March 31, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.31 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News September 14, 2025
சேலம்: கருவில் பாலினம் கண்டறிந்து தெரிவிக்க வசூல்!

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்துத் தெரிவித்ததாக அரசு மருத்துவமனை டாக்டர்.தியாகராஜன் மற்றும் புரோக்கர் ஸ்ரீராம் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த போலீசார் பாலினம் கண்டறிந்து தெரிவிக்க ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை வசூல் செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
News September 14, 2025
சேலத்தில் பட்டாசு கடை வைக்க விண்ணப்பிப்பது எப்படி?

சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசுக் கடைகளை அமைக்க விரும்பும் வியாபாரிகள், வருகிற அக்டோபர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படம்,அடையாள அட்டை,வருமான வரி, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளம் அல்லது அனைத்து பொது இ-சேவை மையங்களிலும் விண்ணப்பம் செய்யலாம்.
News September 14, 2025
சேலம் வழியாக காரைக்குடிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக மைசூரு-காரைக்குடி-மைசூரு இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் (06243/06244) அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்.19-ஆம் தேதி முதல் நவ.30- ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சேலம், நாமக்கல், கரூர் வழியாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.