News August 4, 2024
சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சேலம் மாவட்ட பகுதிகளில் உள்ள 200 ஏரிகளில் தற்போது வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஏரிகளில் அதிகமான ஆழத்தில் மண் எடுப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிகாரிகள் சொல்லும் ஆழத்தில் தான் மண் எடுக்க வேண்டும் என்றும், அதிகமாக எடுத்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 26, 2026
சேலத்தில் கேரள வாலிபர் உயிரிழப்பு

கேரளாவைச் சேர்ந்த ஜியோ ஜோசி (31) என்பவர் சேலம் பள்ளப்பட்டியில் உள்ள டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் உடல் நலிவு காரணமாகவே உயிரிழந்தது தெரியவந்தது.
News January 26, 2026
சேலம்: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு

சேலம் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News January 26, 2026
சேலம் அருகே பேருந்து மோதி சிறுவன் பலி

அம்மாபேட்டை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் இருசக்கர வாகனத்தில் மிலிட்டரி ரோடு பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பின்னால் வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


