News January 25, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் உத்தரவின்படி,நீர், நிலம், காற்று, கடலில் நெகிழி கழிவுகளை சுத்தப்படுத்தும் திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் உள்ள, மாநகராட்ச,6 நகராட்சி,32 பேரூராட்சி, 20 ஊராட்சி ஒன்றியங்கள் என அனைத்திலும் இன்று (ஜன.25) ஒருநாள் நெகிழி கழிவுகளை சுத்தம் செய்யும் தினமாக கடைபிடித்து, அந்தந்த பகுதிகளில் நெகிழிகளை அப்புறப்படுத்த வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News November 15, 2025

மேட்டூர் அருகே இளம்பெண் விபரீத முடிவு

image

சேலம், மேட்டூர் பெரியண்ண கவுண்டர் நகரைச் சேர்ந்த சுருதி (24) என்பவர், விவசாய நிலத்தை விற்பனை செய்வது தொடர்பாக கணவர் சதீஷ்குமாருடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்து நேற்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 15, 2025

பெருமாள் கோவில் கரட்டில் அழுகிய ஆண் சடலம்!

image

சேலம் கோல்நாயக்கன்பட்டி பெருமாள் கரடு பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. உடனடியாக மேட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதில், ரெட்டியூர் காலணியை சேர்ந்த கூலித் தொழிலாளி குப்பன் (57) என்பதும் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

News November 15, 2025

சேலம் அருகே சோகம் இளம்பெண் மரணம்!

image

காடையாம்பட்டி அருகே உள்ள காருவள்ளி பகுதியில் விவசாய கிணறு ஒன்றில் இளம் பெண் சடலம் கிடப்பதாக தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரது மகள் மஞ்சு ஸ்ரீ என்பதும் 19 வயதான அவர் ஏன் எப்படி கிணற்றில் இறந்து கிடந்தார். என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!