News March 11, 2025
சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (மார்ச் 11) திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி. ஆத்தூர், நரசிங்கபுரம், கெங்கவல்லி, ஏத்தாப்பூர், பைத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News March 12, 2025
ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் – போலீசார் அறிவிப்பு

சேலம் சொர்ணபுரியில் ‘ரீ கிரியேட் பியுச்சர் இந்தியா’ என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி பணம் இரட்டிப்பாக தருவதாக பொதுமக்களிடம்கோடிக்கணக்கில் வசூல் செய்து மோசடி செய்த வழக்கில், இந்த நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகாரைக் கொடுக்குமாறு பள்ளப்பட்டி காவல்துறையினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதே போல் ஏமாறாமல் இருக்க மற்றவர்களுக்கும் இதை ஷேர் செய்யுங்கள்.
News March 12, 2025
சேலம் மார்ச்.12 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.12) நடைபெறும் முக்கிய நிகழ்வுகள். ▶️காலை 10 மணி அயோத்தியா பட்டணம் ஊராட்சி அலுவலகம் திறப்பு ▶️பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம் (கோட்டை மைதானம்) ▶️ காலை 11 மணி ஓமலூரில் மக்கள் சந்திப்பு திட்ட முகம் ஆட்சியர் ▶️ மாலை 4 மணி விடுதி மாணவ மாணவர்களுக்கு கிச்சன் திட்டத்தை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் (கோட்டை மைதானம்).
News March 12, 2025
பெண்ணுக்கு கத்திக்குத்து; தொழிலாளி உள்பட 2 பேர் கைது

சேலம் தாதகப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சவுந்தர்யா (வயது 27). இந்தநிலையில் செல்வத்திற்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தகராறில் ஈடுபட்டு சவுந்தர்யாவை கத்தியால் குத்தியுள்ளார். இதற்கு செல்வத்தின் அண்ணன் துரைசாமி உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம், துரைசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.