News March 24, 2025
சேலம் மாவட்டத்தில் கிராம சபைக்கூட்டம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள 385 அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வரும் மார்ச் 29-ம் தேதி சனிக்கிழமை கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, தூய்மை பாரத இயக்க சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கலைஞரின் கனவு இல்லத் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 26, 2025
சேலம்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

சேலத்தில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா? என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
News March 26, 2025
சேலம் மாவட்டத்தில் 41,398 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் மாா்ச் 28 ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 41,398 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். 320 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளை சோ்ந்த 913 மாற்றுத் திறனாளிகள் உள்பட 41 ஆயிரத்து 398 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 183 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
News March 26, 2025
இலவச வேலைவாய்ப்பு திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

சேலம்-7 அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 16 மணி நேரம் கொண்ட கார் பராமரிப்பு அடிப்படை பணிமனை குறுகிய கால பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது.மேலும் விவரங்களுக்கு, துணை இயக்குநர் / முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஏற்காடு மெயின் ரோடு, சேலம்- 636007 என்ற முகவரியிலும், 99769 54196, 99651 03597 கைப்பேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்-உடனே SHARE பண்ணுங்க.