News March 22, 2025
சேலம் மாநகர காவல் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும் ஏதேனும் விபத்துக்கள் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும் இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதன்படி மார்ச் மாதம் 22ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது
Similar News
News March 23, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.23 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News March 23, 2025
CLUB THROW-வில் தங்கம் வென்று அசத்தல்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது கேலோ தேசிய பாரா விளையாட்டு போட்டியில் சேலம் மாவட்டம், கருப்பூரைச் சேர்ந்த அலெக்சாண்டர், ஆடவர் பிரிவில் F51 CLUB Throw-வில் சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
News March 23, 2025
தங்கம் வெள்ளி நிலவரம் போல் கொலை நிலவரம் என்ன?

சேலம் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு கிடப்பதாகவும், தற்போது தினமும் தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன என கேட்பது போல், தமிழகத்தில் கொலை நிலவரம் என்ன என கேட்கக்கூடிய சூழ்நிலை உள்ளதாக தமிழக அரசை குற்றமாட்டினார்.