News June 8, 2024
சேலம் மாநகரில் 51 போலீசார் எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு

தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு எஸ்ஐ பதவி உயர்வு
வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி சேலம் மாநகரில் 25 ஆண்டுகள் பணி முடித்த 51 பேருக்கு எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு வழங்கி கமிஷனர் விஜயகுமாரி இன்று உத்தரவிட்டார். இவர்களுக்கு கூடுதலாக ரூ.3ஆயிரம் சம்பளம்
கிடைக்கும். முன்கூட்டியே அறிவிக்கபடவேண்டிய இந்த பதவி உயர்வு தேர்தல் காரணமாக தாமதமாக இன்று வழங்கப்பட்டுள்ளது
Similar News
News August 21, 2025
சேலம்: தெருநாய் தொல்லையா..? உடனே CALL!

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 18 பேர் நாய் கடியால் உயிரிழந்துள்ளனர். மேலும், தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதிகபட்சமாக 19,250 பேரை தெருநாய்கள் தாக்கி கடித்திருப்பதாக, பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை இருந்தால் 8300062992 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
News August 21, 2025
சேலம்: வாலிபர் படுகொலை வழக்கில் 6 பேருக்கு குண்டாஸ்!

கடந்த ஜூலை 15- ஆம் தேதி தூத்துக்குடியைச் சேர்ந்த மதன்குமார் (25) என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இசக்கிராஜா (35), விக்னேஷ் (20), பிரவீன்ஷா (22), கிருஷ்ணகாந்த் (28), செல்வபூபதி (26), முத்து ரிஷிகபூர் (28) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவிட்டார். இதையடுத்து, 6 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
News August 21, 2025
மேட்டூர் அணையின் 92-வது பிறந்தநாள் இன்று

தமிழக விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ள சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு இன்று (ஆக.21) 92-வது பிறந்தநாள். தமிழகத்தின் மிகப்பெரிய அணை நமது மேட்டூர் அணை. அணையை கட்ட சுமார் 9 ஆண்டுகள் ஆனது. கடந்த 1934-ஆம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டது. அணைக்கட்டும் பணியில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.