News January 31, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (30.01.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் பகுதி வாரியாக வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இதற்கான தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News February 9, 2026
அம்மாபேட்டையில் மகன் கண் முன்னே தாய் பலி

சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுதா. இவர் தனது மகன் ஹரிஷ் குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். இவர்களது வாகனம் அம்மாபேட்டை அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இவ்விபத்தில் நிலைதடுமாறி விழுந்த சுதா, பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News February 9, 2026
அறிவித்தார் சேலம் கலெக்டர்

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் நாளை (பிப்.10) ஒரே நாளில் 13.42 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என மொத்தம் 5,184 இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. (SHARE)
News February 9, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (பிப்.08) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


