News February 9, 2025

சேலம் மாநகராட்சி ஆணையர் மாற்றம்

image

ஐஏஎஸ் அதிகாரிகள் 38 பேரை பணியிடை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேலம் மாநகராட்சியின் ஆணையாளராக இருந்த ரஞ்ஜீத் சிங் தேனி மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ரஞ்ஜீத் சிங் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர். குன்னூர், நாகப்பட்டினத்தில் பணியாற்றிய இவர், கால்நடை பராமரிப்புத் துறையின் துணை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Similar News

News July 7, 2025

சேலம் ஜூலை 7 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் ஜூலை 7 இன்றைய முக்கிய நிகழ்வுகள்▶️ காலை 10 மணி வாராந்திர குறைதீர் கூட்டம் (மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்) ▶️காலை 10 மணி கோட்டை அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்பு ▶️காலை 11மணி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கம்▶️ மாலை 3 மணி அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அமைச்சர்கள் பங்கேற்ப்பு

News July 7, 2025

சேலத்தில் நாளை இங்கு தான் மின் தடை

image

சேலம் மாவட்டத்தில் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஜூலை 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ▶️ உடையாப்பட்டி துணை மின் நிலையம் ▶️மேட்டுப்பட்டி துணை மின் நிலையம் ▶️மல்லியக்கரை துணை மின் நிலையம் ▶️கருப்பூர் துணை மின் நிலையம் ▶️நங்கவள்ளி, மேச்சேரி, மேட்டூர் ஆர்.எஸ். துணை மின் நிலையங்களில் நாளை மின் விநியோகம் இருக்காது.SHAREit

News July 7, 2025

சேலத்தில் 13,450 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள 9 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 13,450 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும், அதற்கான தொகை ரூபாய் 33.07 கோடி, விவசாயிகளின் வங்கி கணக்குகள் மூலம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரவை ஆலைகளுக்கும், சேமிப்பு கிடங்குகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!