News February 19, 2025

சேலம்: மாணவர்கள் மீது வன்கொடுமை வழக்கு

image

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 14 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சில நாட்களுக்கு முன்பு மூன்று மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.இந்நிலையில் அந்த மாணவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆத்தூர் டிஎஸ்பி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Similar News

News September 12, 2025

செப்.13 சேலத்தில் எங்கெல்லாம் முகாம் தெரியுமா?

image

சேலம் செப் 13 நாளை உங்களுடன் முகாம் நடைபெறும் இடங்கள்
▶️சூரமங்கலம் மண்டலம் புனித ஜோசப் தொடக்கப்பள்ளி சூரமங்கலம்
▶️ஓமலூர் சிரஞ்சீவி திருமண மண்டபம் பஞ்சுகாளிப்பட்டி ▶️வாழப்பாடி வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் வேப்பிலைப்பட்டி
▶️சங்ககிரி ரங்கசாமி திருமண மண்டபம் வடுகம்பட்டி ▶️கொங்கணாபுரம் திருக்குறள் திருமண மண்டபம் புதுபாளையம்
▶️ பனமரத்துப்பட்டி விஜய மஹால் திருமண மண்டபம் கஜல்நாயக்கன்பட்டி

News September 12, 2025

அறிவித்தார் சேலம் கலெக்டர்..!

image

சேலம் மாவட்டத்தில் காளான் விதை உற்பத்தி தொகுப்பு அமைக்க விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை நேரிலோ (அ) தபால் மூலமாகவோ திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், அறை எண் 207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரியில் வரும் செப்.15 மாலை 05.00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

News September 11, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

சேலம் மாவட்டத்தில் இன்று (11.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!