News March 25, 2024

சேலம்: மழை பெய்ய வேண்டி சிறப்பு பிராத்தனை

image

சேலம் மாவட்டம் சங்ககிரி பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் நேற்று சிவஜெயந்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அமைதிபெற வேண்டும், மழை பெய்ய வேண்டுமென வலியுறுத்தி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது அமைப்பின் நிர்வாகிகள் அரங்கநாதன், லட்சுமி, வாசவி கிளப் மண்டலத்தலைவர் ஆனந்த், பல் மருத்துவர் அருள், ஓம்ராம் அறக்கட்டளை நிறுவனர் சுந்தரவடிவேல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News

News October 27, 2025

சேலம்: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

image

சேலத்தில் உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> செய்யவும். தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. (SHARE பண்ணுங்க)

News October 27, 2025

சேலம்: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

image

சேலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இன்று முதல் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தைகளுக்கு திரவம் அளிக்க வேண்டும்.SHAREit

News October 27, 2025

சேலம் அருகே தந்தையை கொன்று ஆற்றில் வீசிய மகன்!

image

மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான கோட்டையூர் பரிசல் துறையில் கர்நாடக மாநிலம் கோபிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரன் (70) என்ற முதியவரின் உடல் காவிரி ஆற்றில் மிதந்தது.போலீசார் விசாரணையில் இவரது மகன் கோவிந்தராஜ், சங்கரனைக் கொலை செய்து காவிரி ஆற்றில் வீசியது தெரியவந்தது; இது குறித்து கொளத்தூர் போலீசார் கொடுத்த தகவல் அடிப்படையில் கர்நாடக மாதேஸ்வரன் மலை போலீசார் விசாரணை!

error: Content is protected !!