News September 20, 2024
சேலம்: பள்ளி பேருந்து மோதி ஒருவர் பலி

கெங்கவல்லி தெடாவூர் புதூர் பகுதியில் வசிப்பவர் வடிவேலு. இவர் நேற்று முன்தினம் (19-09-24) மாலை கெங்கவல்லியிலிருந்து தெடாவூர் புதூருக்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீரகனூரிலிருந்து கெங்கவல்லி நோக்கி வந்த தனியார் பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 8, 2025
தீரா கடன்களை தீர்க்கும் நங்கவள்ளி கோயில்!

சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் லட்சுமி நரசிம்ம சாமி- சோமேஸ்வரசாமி கோயில் உள்ளது. இது சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோயிலாகும். இங்கு நரசிம்மரை, பிரதோஷ நாளான இன்று, பால், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபட்டால், தீராத கடன் தொல்லைகள் தீருமாம். இதை SHARE பண்ணுங்க.
News July 8, 2025
2 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!

எர்ணாகுளம்-டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயில் (18190) இன்றும் (ஜூலை 08), நாளையும் (ஜூலை 09) போத்தனூர்-கோவை-இருகூர் மார்க்கத்திலும், ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352) இன்றும், நாளையும் கோவைக்கு செல்லாமல் போத்தனூர்-இருகூர் மார்க்கத்தின் வழியே இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது எனவே இந்த ரயில்களில் பயணிக்கும் பயணிகள் தங்களது பயண திட்டங்களை வகுத்து கொள்ளுமாறு வேண்டுகோள்!
News July 8, 2025
சேலம் சரகத்தில் ரூ.20 கோடிக்கு மாம்பழம் விற்பனை

சேலம் சரகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் மாம்பழம் சீசன் முடியும் தருவாயில் உள்ளது. தற்போது கடைசி ரகமான நீலம் வகை மாம்பழம் விற்பனை நடைபெற்று வருகிறது. சேலம் சரகத்தில் மட்டும் நடப்பாண்டு சீசனில் சுமார் ரூபாய் 20 கோடி அளவுக்கு மாம்பழங்கள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மாம்பழம் சீசன் 100 நாட்கள் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.