News September 15, 2025
சேலம்: தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் பலி!

ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் பகுதியில் வசிப்பவர் பிரசாந்த் (34) இவருடைய 5 வயதான மகன் நேற்று மாலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சிறுவனின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Similar News
News September 15, 2025
சேலம் அரசு பொருட்காட்சிக்கு இதுவரை 55 ஆயிரம் பேர் வருகை

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு பொருட்காட்சி கடந்த ஆடி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசின் 32 அரங்குகள் அத்துடன் ராட்டினம், ரயில்கள், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 55,245 பேர் பார்வையிட்டுள்ளனர். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை தினங்களில் அதிக அளவில் மக்கள் இந்த அரசு பொருட்காட்சிக்கு வருவதாக மாநகராட்சிஅதிகாரிகள் மேலும் 18 நாட்கள் நடைபெறும்.
News September 15, 2025
சேலம்: B.E./B.Tech போதும்..ரூ.54,000 சம்பளத்தில் வேலை!

சேலம் மக்களே, The Indian Port Rail & Ropeway Corporation Limited (IPRCL) காலியாக உள்ள 18 Project Site Engineer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.54,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 15, 2025
இன்று சேலம் வருகிறார் உதயநிதி ஸ்டாலின்!

சேலம் மாவட்டம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நாளை நடைபெறும் விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, சுமார் 6,000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, துணை முதலமைச்சர் இன்று மாலை விமானம் மூலம் சேலம் வருகிறார். ஓமலூர் பகுதியில் இருந்து கருப்பூர் வரை பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.