News October 7, 2025
சேலம்: செல்போன் விவகாரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!

எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் இவரது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு செல்லாமல், செல்போனை பார்த்திருந்த அவரை தந்தை கண்டித்துள்ளார். இதனால் நேற்று இரவு மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த எடப்பாடி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News November 9, 2025
சேலம்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சேலம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல், <
News November 9, 2025
சேலம்: WhatsApp மூலம் பணம் பறிபோகலாம்!

சேலம் மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன்படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும். விவரம் தெரியாத பலரும் இதனால் ஏமாற்றப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தல் பணம் பறிபோகலாம். எனவே, உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!
News November 9, 2025
சேலம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கத்தி குத்து!

சேலம், சின்ன கொல்லப்பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் சசிகுமார், இவர் கல்குவாரி உரிமையாளர் ஒருவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இது தெரிய வந்ததும், அந்த பெண்ணின் கணவர் சசிகுமாரை மிரட்டி, கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சசிகுமார் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


