News January 7, 2026
சேலம்: செல்போன் மோகத்தால் நிகழ்ந்த துயரம்!

சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்( 40). இவரது 17 வயது மகன், படிப்பில் கவனம் செலுத்தாமல் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கிச்சிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மகனின் இந்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 22, 2026
சேலத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை!

சேலத்தில் நாளை(ஜன.23) மின் பராமரிப்பு பணி நடைபெறுகின்றது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை சிங்கிபுரம்,வாழப்பாடி, துக்கியாம்பாளையம்,அத்தனுார்பட்டி,பேளூர், தாரமங்கலம் ,தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திக்காட்டானுார்,வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், மருளையம்பாளையம்,பெத்தாம்பட்டி, ராஜாபாளையம், அரியானுார், சீரகாபாடி, சன்னியாசிப்பட்டி, ஜலகண்டாபுரம், ஆடையூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை
News January 22, 2026
சேலம்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News January 22, 2026
சேலம்: உணவில் தரம் இல்லையா ? இத பண்ணுங்க!

சேலம் மாவட்டத்தில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் சாலையோரக் கடைகள் இயங்கி வருகிறது. இங்கு வழங்கப்படும் உணவின் தரம் அல்லது சுகாதாரத்தில் குறைபாடுகள் இருந்தால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலரை 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் புகாரளிக்கலாம். உங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


