News September 13, 2025
சேலம்: சிசிடிவி கேமராக்கள் மூன்றாவது கண்!

சேலம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், கண்டறியவும் சிசிடிவி கேமராக்கள் அனைவருக்கும் உதவியாக உள்ளது. தெருக்கள், கடைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், குற்றத்தடுப்பிலும், குற்றங்களை கண்டறிவதிலும் உற்ற நண்பனாய் விளங்கும் சிசிடிவி கேமிராக்களை நிறுவி பாதுகாப்பை மேம்படுத்துவோம்.
Similar News
News November 11, 2025
சேலத்தில் 12 பேர் அதிரடி கைது: ஏன் தெரியுமா?

சேலம் கன்னங்குறிச்சி அடுத்த கோம்பைகாடு பகுதியில் உள்ள அப்பேரல் கிங்டம் ஸ்வெட்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த 12 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், குடியுரிமை பெறாமல் தங்கியிருந்த ஒரு பெண் உட்பட 12 பேர் கைது செய்தனர்.
News November 11, 2025
சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

இளம் சாதனையாளர் களுக்கான கல்வி உதவித் தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நவம்பர் 15 வரையிலும், கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களை சரிபார்க்க நவம்பர் 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார். மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.
News November 11, 2025
சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சேலம் வழியாக சபரிமலை மண்டலப் பூஜையை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நரசப்பூர்- கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை (07105/07106] தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் நவ.16 முதல் ஜன.18 வரை நரசப்பூரில் இருந்து கொல்லத்திற்கும், வரும் நவ.18 முதல் ஜன.20 வரை கொல்லத்தில் இருந்து நரசப்பூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் சேலத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும்.


