News April 3, 2025
சேலம்: கொலை வழக்கில் 7 பேர் கைது

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பங்காளியூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடந்த 30ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு 7 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மனைவி, மகனை தேடி வருகின்றனர்.
Similar News
News April 3, 2026
சேலம்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News April 3, 2026
சேலம்: பேருந்தில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு

தமிழக அரசு பேருந்துகளில், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது, அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News April 3, 2026
BREAKING: ஆத்தூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

ஆத்தூர் (தனி) சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் அர்த்தனாரி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இத்தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்ட அனுபவம் கொண்ட இவருக்கு, காங்கிரஸ் தலைமை மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, திமுக மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் அவருக்கு நேரில் சந்தித்துத் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


