News November 29, 2025

சேலம்: கைதிகளுக்கு சப்ளை செய்த சிறை வார்டன்!

image

சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றி வருபவர் செல்வராஜ். இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர். இவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், தொடர்ந்து இவரை கண்காணித்து வந்தனர். இவரது ஓய்வு அறையில் 3 செல்போன், 1 சிம் கார்டு, 80 கிராம் கஞ்சா, 50 கிராம் ஹான்ஸ், 50 போதை மாத்திரைகள் இருந்த நிலையில் கைதிகளுக்கு சப்ளை செய்துள்ளார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

Similar News

News December 1, 2025

சேலம்: ரயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து பலி

image

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சேர்ந்த மாபுபலி மனைவி, சர்பன் பீபி(72), நேற்று காலை கேரளா செல்ல பெங்களூரு–எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிக்க முயன்றபோது, 9-வது பெட்டியில் முன்பதிவு செய்யப்பட்ட உறவினர்களுடன் சேர முயற்சித்தபோது ரெயில் புறப்பட்டு தண்டவாளத்தில் விழுந்து இறந்தார். ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 1, 2025

சேலம் அருகே மயில் மோதியதில் பெண் பலி!

image

சேலம் அருகே நாவப்பாளையம் பகுதியில் பிரபுதேவா மற்றும் மனைவி கோகிலா நேற்று மோட்டார் சைக்கிளில் வீட்டு திரும்பும்போது கல்பாரப்பட்டி அருகே ஒரு மயில் திடீரென விழுந்தது. மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். கோகிலா பலத்த பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். பிரபுதேவா லேசான காயத்துடன் உயிர் மீட்டார். சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 1, 2025

ஆத்தூரில் போஸ்கோ வழக்கில் ஒருவர் கைது

image

ஆத்தூர் பகுதியில் வசிக்கும் விகாஸ் வயது 21 இவருக்கும் ஆத்தூர் பகுதி சேர்ந்த ரேஷ்மி வயது 18 கடந்த 11ஆம் தேதி திருமணம் செய்துவிட்டு இருவரும் வாழ்ந்து வந்த நிலையில் ரேஷ்மி கணவருடன் கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் 17 வயதில் திருமணம் செய்ததால் ரேஷ்மி கொடுத்த புகாரின் பெயரில் விகாஸ் மீது போஸ்கோ சட்டத்தில் ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

error: Content is protected !!