News April 21, 2024
சேலம்: கிணற்றில் விழுந்த மான் மீட்பு

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள கோடம்பாக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன். இவருடைய விவசாய கிணற்றில் மான் ஒன்று தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதுகுறித்து செல்லப்பன் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கும், மேட்டூர் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் மானை உயிருடன் மீட்டு வனபகுதியில் விட்டனர்.
Similar News
News August 23, 2025
சேலம்: 1,823 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி!

விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற ஆகஸ்ட் 27- ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் 1,823 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட காவல்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இதில் மாநகர் பகுதிகளில் மட்டும் 865 இடங்களில் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
News August 23, 2025
சேலம் வழியாக இயக்கப்படும் 5 ரயில்கள் கோவை செல்லாது!

தண்டவாள மறுசீரமைப்பு பணிகள் நடப்பதால் நாளைய (ஆக.24) சேலம் வழியாக இயக்கப்படும் தாம்பரம்-மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (16159), பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (22644), திப்ரூகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (22504), ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352), எர்ணாகுளம்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12678) ஆகிய ரயில்கள் நாளை கோவை செல்லாமல் போத்தனூரில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
News August 23, 2025
சேலத்தில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்▶️சேலம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0427-2420011▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)