News August 26, 2025
சேலம்: காலை உணவு திட்டத்தில் 11,488 பேர் பயன்பெறுவர்!

காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புற அரசு உதவிபெறும் 2,429 பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்து இன்று (ஆக.26) தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. சேலத்தில் மொத்தம் 61 பள்ளிகளில் 11,488 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News August 26, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.26) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News August 26, 2025
சேலத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு: அரிய வாய்ப்பு!

சேலம் மாவட்டத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு ஆக.28ம் தேதி ஈரோடு மாவட்டம். வ.உ.சி பூங்கா, விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. அக்னி வீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர்/ஸ்டோர் கீப்பர். உட்பட பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். தகுதியுள்ளவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே <
News August 26, 2025
ஆக.27-ல் விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நாளை (ஆக.27) நடக்கவிருந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும், என்ற சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ.க.வின் கோரிக்கையை ஏற்று நாளை நடக்கவிருந்த விளையாட்டு போட்டிகள் வரும் ஆக.30-ஆம் தேதி நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.