News September 10, 2024
சேலம் கலெக்டர் வேண்டுகோள்

இன்று (செப்.10) சேலம் மரவனேரி புனிதபால் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள ‘உயர்வுக்கு படி’ நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடையுமாறு மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார். நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் கலந்துகொண்டு உயர்கல்விக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், வங்கி கடனுதவிகள் தொடர்பான சேவைகள், தொழில்நுட்பக் கல்வி குறித்த ஆலோசனைகளையும் வழங்கவுள்ளனர்.
Similar News
News August 24, 2025
சேலம்: சிலிண்டர் டெலிவரிக்கு அதிக பணம் கொடுக்கணுமா?

சேலம் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News August 24, 2025
2 மாதங்களுக்கு ஒருமுறை விதை பரிசோதனை அவசியம்!

சேலம் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; விவசாயிகள் விதையின் முளைப்புத்திறன், ஈரப்பதம் அறிந்து கொள்ள 2 மாதங்களுக்கு ஒருமுறை விதை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதன் முடிவுகளின் படி, சில பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ளலாம். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் விதைப் பரிசோதனை நிலையத்தில் ரூ.80 கட்டணத்துடன் விதை பரிசோதனை செய்யலாம்.
News August 24, 2025
சேலத்தில் பச்சிளம் பெண் குழந்தை விற்பனை!

சேலம் வீரபாண்டி, ரெட்டிப்பட்டியை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்-சிவகாமி தம்பதியினருக்கு கடந்த 9 நாள்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை தேவராஜ் என்ற புரோக்கர் மூலமாக, ரஞ்சித் என்பவருக்கு ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.