News May 7, 2025
சேலம்: கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை!

சேலம்: வாழப்பாடி சுக்கியம்பாளையத்தை சேர்ந்த 55 வயதான விவசாயி வடிவேல் தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், சரியான விவசாய மகசூல் இல்லாததால் கடன் செலுத்த முடியாமல் தவித்து வந்ததுள்ளார். இதையடுத்து, நிதி நிறுவனத்தின் தொந்தரவு தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டார் என வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News September 15, 2025
சேலம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

சேலம் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு<
News September 15, 2025
சேலம் மாநகர காவல்துறை எச்சரிக்கை!

சேலம் சிட்டி போலீஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் ஆப்ஸ் மூலம் வரும் APK கோப்புகளை பதிவிறக்க வேண்டாம், என அறிவுறுத்தியுள்ளது. அவை மால்வேர் கொண்டு உங்கள் கைபேசியை பாதித்து தனிப்பட்ட தகவல்களை திருடும் அபாயம் உள்ளது. நம்பகமான மூலங்களில் இருந்து மட்டுமே ஆப்ஸ் பதிவிறக்கவும். புகார் பதிவு செய்ய www.cybercrime.gov.in பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
News September 15, 2025
சேலம்: பயன்பாட்டிற்கு வரும் தாழ்தளப் பேருந்துகள்?

சேலம் கோட்டத்திற்கு முதற்கட்டமாக 16 தாழ்தளப் பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள இப்பேருந்து சேவைகளின் துவக்க விழா அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் எண்-1 பேருந்து சேலம் மாநகரத்தில் பயணிக்க உள்ளது. குறிப்பாக புதிய பேருந்து நிலையம் முதல் அயோத்தியாபட்டணம் வரை இயக்கப்படும், இப்பேருந்து 3 பைபாஸ் வழியாக இயக்கப்படும்.