News October 18, 2025
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் மற்றும் இயற்கை இடர்பாடுகளில் சிக்கிய பொதுமக்களை பாதுகாப்பதற்காக அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரர்களின் விபரம் வெளியிடப்பட்டது.
Similar News
News October 18, 2025
சேலம்: POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக்.29க்குள் https://ibpsonline.ibps.in/ippbljul25/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நபர்களுக்கு இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.
News October 18, 2025
சேலம்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை.நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 மற்றும் 1912 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News October 18, 2025
கார் கவிழ்ந்த விபத்தில் சேலம் தம்பதி உயிரிழப்பு!

சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (58); வெள்ளி வியாபாரி. இவரது மனைவி கவிதா (49). இவர்கள், நேற்று காலை தங்களுக்கு சொந்தமான காரில், சேலம் – அரூர் தேசிய நெடுஞ்சாலையில், அரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காலை, 8:30 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்தகார், இருளப்பட்டி கானியம்மன் கோவில் எதிரே தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் கணவன் -மனைவி இருவரும் உயிரிழந்தனர்.விபத்து குறித்து போலீசார் விசாரணை!