News December 15, 2025
சேலம் இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் மாவட்டம் ஊரகப் பகுதிகளில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் எதேனும் அவசர உதவி தேவைபட்டால் 100 என்ற எண்ணுக்கு அழைக்கவும். அல்லது புகைப்படத்தில் குறிப்பிடபட்டுள்ள உங்கள் காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்.
Similar News
News December 21, 2025
பெண்களே ஆபத்தா? 181 அழையுங்கள்!

ம்: சேலம் மாவட்ட காவல்துறையின் சட்ட ஒழுங்குப் பிரிவு சார்பில் பெண்கள் பாதுகாப்பிற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பெண்களுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது இன்னல்கள் ஏற்பட்டால், உடனடியாக உதவி பெற ‘181’ என்ற அவசர எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாகக் காவல்துறை பாதுகாப்பு மற்றும் உதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 21, 2025
தாரமங்கலம் அருகே சோகம்: இளம்பெண் விபரீத முடிவு

தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி பகுதியில் சரபங்கா நதியில் நேற்று கோகுலபிரியா (21) என்ற இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பெற்றோர் காதலை எதிர்த்ததால் மனமுடைந்த அவர் நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
News December 21, 2025
சேலத்தில்13 பேரை கடித்து குதறிய நாய்; பரபரப்பு!

சேலம்: பெத்தநாயக்கன்பாளையம் கல்வராயன் மலைப் பகுதி கரியகோயில் கிராமத்தில், பள்ளி அருகே சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று துரத்தித் துரத்தி கடித்ததில் மாணவர்கள் பெரியவர்கள் என 13 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் கருமந்துறை மற்றும் ஆத்தூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தடுப்பூசி மற்றும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


