News December 14, 2024
சேலம்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய (டிச.14) இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News March 9, 2026
சேலம்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<
News March 9, 2026
சேலம் காரிப்பட்டி அருகே பயங்கர விபத்து!

சேலம், கருமாபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன் (52). இவர் நேற்று இரவு கருமாபுரம் அருகே பத்தாங்கல் மேடு பகுதியில், சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியதில், கணேசன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 9, 2026
ஆத்தூர்: மனைவிக்கு பிடித்த பாடலை வைக்காததால் பரபரப்பு!

ஆத்தூர் பழனியாபுரியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அஜித்குமார். இவர் வீட்டில் நேற்று டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் போது அவரது அவரது மனைவி புவனேஸ்வரி (25) தனக்கு பிடித்த பாடலை டிவியில் போடும்படி கூறியுள்ளார். இதில் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி சமையலறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான். ஆத்தூர் போலீசார் விசாரணை!


