News March 11, 2025
சேலம்: இதை செய்யலனா ரேஷன் அட்டை கேன்சல் ஆகிடும்

கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலத்தில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் eKYC பதிவினை மேற்கொள்ளாமல் உள்ளார்கள். அவர்களுக்கு தங்கள் e-KYCயை முடிப்பதற்கான கடைசி தேதி மார்ச்.25 ஆகும். இந்த செயல்முறை ஆன்லைனிலோ அல்லது ரேஷன் கடைகளிலோ மேற்கொள்ளலாம். இதற்கு ஆதார் அட்டை, மொபைல் எண் கட்டாயம் தேவை”. இதை ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Similar News
News March 11, 2025
சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சேலம் வழியாக ஈரோடு- ஒடிஷா மாநிலம், சாம்பல்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. மார்ச் 12 முதல் ஏப்ரல் 30 வரை சாம்பல்பூரில் இருந்து ஈரோட்டிற்கும், மார்ச் 14 முதல் மே 02 வரை ஈரோட்டில் இருந்து சாம்பல்பூருக்கும் ரயில்கள் (08311/08312) இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 11, 2025
சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

ஜோலார்பேட்டை- திருப்பத்தூர் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, மார்ச் 12, 19 தேதிகளில் ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் (56108) ஈரோட்டில் இருந்து திருப்பத்தூர் வரையிலும், ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் (56107) திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டு ஈரோட்டிற்கு செல்லும். இந்த ரயில்கள் ஜோலார்பேட்டை- திருப்பத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News March 11, 2025
சேலம் மாநகரில் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (11.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம்.