News September 15, 2024
சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி தகவல்

சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 23,128 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு 94.82 கோடி ரூபாய் மதிப்பில் உதவி உபகரணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கூறினார்.
Similar News
News November 11, 2025
சேலம்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News November 11, 2025
சங்ககிரி அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம்!

சங்ககிரி: புல்லாகவுண்டம்பட்டி ராமகூடல் ஓடையில் ஆண் சடலம் ஒன்று கிடைப்பதாக தேவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டனர்.சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது. அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எவ்வாறு இறந்தார் என்பது தெரியவில்லை, இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
News November 11, 2025
சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித் தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நவம்பர் 15 வரையிலும், கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களை சரிபார்க்க நவம்பர் 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார். மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.


