News December 2, 2025
சேலம் அரசு பள்ளி மாணவன் சாதனை!

அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான பளுதூக்கும் போட்டியில், சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவன் கபிலன், தமிழக அணியில் கலந்து கொண்டு 56 கிலோ எடை பிரிவில் போட்டியிட்டார். அவர் மொத்தம் 191 கிலோ எடையை தூக்கி மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். சேலம் மாணவனுக்கு ஆசிரியர்கள் மற்றும் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
சேலம்: பெற்றோரைக் காண வந்த ஐடி ஊழியர் தற்கொலை!

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கோகுலகண்ணன் (34), பெற்றோரைக் காண விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று காலை உணவு உண்டுவிட்டு மாடி அறையில் உறங்கச் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வராததால் பெற்றோர் கதவை உடைத்து பார்த்ததில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தகவலின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 2, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (டிச. 02) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News December 2, 2025
BREAKING: சேலம் மக்களே..நாளை கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை, சேலம் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வெளியில் செல்லும் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. ஷேர் பண்ணுங்க மக்களே!


