News April 23, 2025
சேலம்: அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்தில் உள்ள அரசு டவுன் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் என மொத்தம் 1,900 பேருந்துகளிலும் கடந்த மாதம் முதல் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. வெகு தூரம் செல்லும் பேருந்துகளில் இந்த பரிவர்த்தனை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும் டவுன் பேருந்துகளில் வரவேற்பு கிடைக்கவில்லை.
Similar News
News December 10, 2025
மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர்ப்பு சிறப்பு முகாம்!

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (டிச.10) மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தகவல் தெரிவித்தார்.
News December 10, 2025
தொழிலாளர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்!

சேலம் மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவகங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிந்து வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை labour.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தொழிலாளர் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பதிவு செய்த விவரத்தினை inspectoroflabour.tn.gov.salem@gmail.com F அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்ற ஆட்சியர்!

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில், சர்வதேச மனித உரிமைகள் தின விழா உறுதிமொழி ஏற்ப நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்த தக்க பன்னாட்டு சட்டங்களில் வரையறுக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் குறித்து, உண்மையுடனும் பற்றுடன் நடந்து கொள்வேன் என உறுதி வாசிக்க மற்றவர்கள் திரும்ப வாசித்தனர்.


