News April 23, 2025

சேலம்: அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை!

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்தில் உள்ள அரசு டவுன் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் என மொத்தம் 1,900 பேருந்துகளிலும் கடந்த மாதம் முதல் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. வெகு தூரம் செல்லும் பேருந்துகளில் இந்த பரிவர்த்தனை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும் டவுன் பேருந்துகளில் வரவேற்பு கிடைக்கவில்லை.

Similar News

News September 15, 2025

சேலம்: தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் பலி!

image

ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் பகுதியில் வசிப்பவர் பிரசாந்த் (34) இவருடைய 5 வயதான மகன் நேற்று மாலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சிறுவனின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

News September 15, 2025

சேலத்தில் ரிசர்வ் பேங்க் பெயரில் மோசடி – மக்களே உஷார்!

image

ரிசர்வ் பேங்க் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 13 பேரை சேலம் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் ஒரே நாளில் நடத்திய சோதனையில் 30 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சேலம் சிபிசிஐடி காவல்துறையினர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த செல்வம் (54), விருதுநகரைச் சேர்ந்து செல்வக்குமார் (52), கரூரை சேர்ந்த ராயன் (64), ஆகியோரை கைது செய்தனர்.

News September 14, 2025

சேலம்: போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

image

சேலம் மாநகர போக்குவரத்து காவல்துறையினர், பொதுமக்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு செய்துள்ளனர். அதன்படி அவசர உதவிக்கு-100, ஆம்புலன்ஸ்-102, சாலை விபத்து உதவி-1073, தேசிய நெடுஞ்சாலை உதவி-1033 ஆகிய எண்களை உதவிக்கு அழைத்தால் உடனடியாக உதவிக்கு வருவார்கள் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் சாலை விதிகளை கடைபிடித்து விபத்தில்லா பயணம் செய்யுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!