News October 18, 2025
சேலம்:வாலிபருடன் பழகிய மனைவி கொலை!

சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ரதிதேவி (28). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது ரதிதேவி, தான் வேலை பார்க்கும் இடத்தில் ஒருவருடன் பழகிவந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன், வீட்டில் இருந்த கத்தியால் ரதிதேவியை சரமாரியாகக் குத்தினார். இதில் ரதிதேவி உயிரிழந்தார். அன்னதானப்பட்டி போலீசார் கண்ணனைப் கைது செய்து விசாரணை
Similar News
News October 18, 2025
சேலத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை!

சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மோகன்குமார் (30), அடிக்கடி உடல்நலக்குறைவால் மனமுடைந்து நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 18, 2025
சேலம் விவசாயிகளுக்கு மானியம் கலெக்டர் அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண்மை விளைப் பொருட்களுக்கான மதிப்பு கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழில் மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். சேலத்திற்கு ரூபாய் இரண்டு கோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் (http://www.agrimark.in.gov.in/) இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.SHAREit
News October 18, 2025
சேலம்: கிராம ஊராட்சி செயலாளர் வேலை! அரிய வாய்ப்பு

சேலம் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!