News October 13, 2025

சேலம்:தாய்க்கு உணவு வாங்கிச் சென்ற மகன் பலி!

image

சேலம்: வாழப்பாடி அண்ணாநகரைச் சேர்ந்தவர்கூலித்தொழிலாளி ராஜ்குமார்(34). திருமணமாகாத இவர் தாய் அங்கம்மாளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் தனது தாய்க்கு உணவு வாங்கிக் கொண்டு நேற்று இரவு டூவீலரில் வீடு திரும்பிய போது, அண்ணாநகர் மாரியம்மன் கோயில் அருகே, பேளூரில் இருந்து பூக்கள் ஏற்றி வந்த மினி ஆட்டோ மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News November 8, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் ஊரகம் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், தலைவாசல், வீரபாண்டி, சேலம் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி இன்று (நவ. 08) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News November 8, 2025

சேலம்: பிளஸ்-2 மாணவிக்கு இன்ஸ்டாவில் தொல்லை!

image

சேலம் சூரமங்கலம் அருகே காசக்காரனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (37), இவர் பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 8, 2025

சேலம் கோட்டத்தில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள்!

image

சேலம் மாவட்டத்தில் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த தொடர் விடுமுறையை முன்னிட்டு, சேலம் கோட்டத்தில் நேற்று முதல் வருகிற 10-ம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவு மையம் மற்றும் இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம். பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் குணசேகரன் தெரிவித்தார்.

error: Content is protected !!