News March 21, 2025

சேலத்தை கலக்கும் ‘குளுகுளு’ ஆட்டோ

image

சேலம் குரங்குசாவடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுப்பிரமணி(74) . இவர் தனது ஆட்டோவின் கூரையில் சோளத் தட்டு மற்றும் வைக்கோல் கட்டி அதன் மீது குளிர்ந்த தண்ணீரை தெளித்து, வலம் வருகிறார். அதேபோல் சிறிய தண்ணீர் டேங்க், மொபைல் சார்ஜிங் பாயிண்ட், ஃபேன் ஆகியவற்றை ஆட்டோவில் இணைத்துள்ளார். சேலத்தை கலக்கும் இந்த ஆட்டோ குறித்து உங்கள் கருத்து என்ன? 

Similar News

News March 24, 2025

இன்றே கடைசி நாள்: ஓவிய சிற்பக் கலைஞர்களுக்கு பயிற்சி முகாம்

image

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓவிய சிற்பக் கலைஞர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் ஓவிய சிற்பக் கலைஞர்கள் தங்களது சுயவிவரக்குறிப்பு விவரத்தினை மண்டல உதவி இயக்குநர் கலை பண்பாட்டு மையம், திருப்பதிகவுண்டனூர் சாலை ஆவின் பால் பண்ணை எதிரில், அய்யம்பெருமாம்பட்டி அஞ்சல், சேலம்-636302 என்ற முகவரிக்கு இன்று மார்ச் 24- க்குள் அனுப்ப வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 24, 2025

சேலத்தில் ‘தீபாவளி சீட்டு’ மோசடி; 4 பேர் கைது

image

சேலம் மூலப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் , செந்தில்குமார்(50) , அவரது மனைவி செந்தமிழ் செல்வி(45). இவர்களுடன் லீலாவதி, பரத் ஆகியோர் இணைந்து தீபாவளி பண்டிகைக்கு கவர்சிகர முதலீடு திட்டங்களை அறிவித்தனர். இதனை நம்பி ஏராளமானோர் பணம் செலுத்தியநிலையில் தீபாவளிக்கு முன் பணத்தை கொடுக்காமல் தலைமறைவாகினார். இது குறித்த புகாரின் அடிப்படையில் 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

News March 24, 2025

சேலம் மாவட்டத்தில் கிராம சபைக்கூட்டம்

image

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள 385 அனைத்து கிராம ஊராட்சிகளிலும், வரும் மார்ச் 29-ம் தேதி சனிக்கிழமை கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, தூய்மை பாரத இயக்க சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கலைஞரின் கனவு இல்லத் திட்டம் குறித்து விவாதிக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!