News January 2, 2026
சேலத்தில் 307 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்!

சேலம்: ரவுடிகள் தொடர் திருட்டு வழிப்பறி கஞ்சா புகழைப் பொருட்கள் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர் அதன்படி சேலம் மாநகரில் 127 பேர் நாமக்கல் மாவட்டத்தில் 97 பேர் தருமபுரியில் 14 பேர் கிருஷ்ணகிரியில் 42 பேர் என 307 பேர் கடந்த ஆண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அணில் குமார் கிரி தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 2, 2026
சேலம் மக்களே.. அவசியம் SAVE பண்ணுங்க!

மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE & SAVE பண்ணுங்க!
News January 2, 2026
சேலம்: டாஸ்மார்க் நிர்வாகம் அதிரடி உத்தரவு

சேலம் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 84 கடைகளில் மட்டுமே அரசு அனுமதி பெற்ற பார்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கான2023 -2025 ஒப்பந்தம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது
இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் டாஸ்மார்க் பார்களின் உரிமத்தை மேலும் ஆறு மாதம் நீடித்து டாஸ்மார்க் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது
News January 2, 2026
சேலத்தில் இளம் பெண் விபரீத முடிவு!

சேலம், கருப்பூரைச் சேர்ந்தவர் கௌசல்யா (28). இவர் தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கருப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏற்கனவே கௌசல்யா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், சிகிச்சை எடுத்து வந்த நிலையில் வலி அதிகமானதால் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.


