News January 2, 2026
சேலத்தில் 307 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்!

சேலம்: ரவுடிகள் தொடர் திருட்டு வழிப்பறி கஞ்சா புகழைப் பொருட்கள் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர் அதன்படி சேலம் மாநகரில் 127 பேர் நாமக்கல் மாவட்டத்தில் 97 பேர் தருமபுரியில் 14 பேர் கிருஷ்ணகிரியில் 42 பேர் என 307 பேர் கடந்த ஆண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அணில் குமார் கிரி தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 3, 2026
கெங்கவல்லி: பெற்றோர் கழுத்தை அறுத்த மகன்!

கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டியைச் சேர்ந்த விவசாயி சரவணன் (70) மற்றும் அவரது மனைவி பாப்பாத்தி (60). இவர்களது மகன் தர்மராஜா (40), ஆட்டோ டிரைவரான இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனை பெற்றோர்கள் தட்டிகேட்ட போது ஆத்திரமடைந்த தர்மராஜா, கத்தியால் இருவரின் கழுத்தையும் அறுத்தார்.இது குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து தர்மராஜாவைக் கைது செய்தனர்.
News January 3, 2026
சேலம் வாக்காளர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

சேலத்தில் உள்ள 1,346 வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் வரும் இன்று மற்றும் நாளை(ஜன.4) ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதில் புதிய வாக்களர் அடையாள அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.மேலும் <
News January 3, 2026
ஏற்காடு மலைப்பாதையில் இளைஞர் பலி!

சேலம் மல்லூரைச் சேர்ந்த தனியார் நிறுவன உதவி மேலாளர் ஆனந்த் (25), நேற்று முன்தினம் ஏற்காட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். சேர்வராயன் கோவில் வளைவில் அதிவேகமாகச் சென்றபோது நிலைதடுமாறி விபத்துக்குள்ளான அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


